Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

பெண்ணின் கர்ப்பபையில் 3 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
பெண்ணின் கர்ப்பபையில் 3 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழங்குடியின பெண்ணுக்கு கர்ப்பபையில் 2 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து 3 கிலோ கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தொமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினரான ரவியின் மனைவி லட்சுமி. இவர் கடந்த ஓராண்டாக அடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததோடு, மாத விலக்கின் போது ரத்த போக்கும் அதிகமாக இருந்துள்ளது. இதனால் லட்சுமி மிகவும் அவதிக்குள்ளாகி வந்துள்ளார். இதையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இம்மாதம் 8}ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, உடல் பரசோதனை செய்த போது ரத்த கட்டியும் இருந்ததோடு, கர்ப்பபையில் கட்டி வளர்ந்திருப்பதும் தெரியவந்தது.


பின்னர் லட்சுமிக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவக்குழு முடிவு செய்தது. அதன்பேரில்  மருத்துவமனையின் முதல்வர் (டீன்) அரசி ஸ்ரீவத்சன் தலைமையில் மருத்துவர்கள் வைரமாலா, மணிலட்சுமி ஆகியோர் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை மூலம் அப்பெண்ணின் கர்ப்பபையிலிருந்து 3 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனை செய்தனர். தற்போது, அப்பெண் நலமாக படுக்கையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via