Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

3வது அலை  எப்போது வரும்?.. எய்ம்ஸ் இயக்குநர் 

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
3வது அலை  எப்போது வரும்?.. எய்ம்ஸ் இயக்குநர் 

 


இந்தியாவில் 3வது அலை பரவல் எப்படி இருக்கும், அதன் தாக்கம் எத்தகையது என்று புது தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 2வது அலை படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது.. நேற்று புதிதாக 33,212 கொரோனா கேஸ் உறுதியாகி உள்ளது.. 35,497 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர்... 421 பேர் உயிரிழந்துள்ளனர்..


இப்படிப்பட்ட சூழலில் 3வது அலை வரும் என்ற எச்சரிக்கைகள் கிடைத்து வருகின்றன. இதுதொடர்பாக எய்ம்ஸ் டைரக்டர் ரந்தீப் குலேரியா 3வது அலை பரவல் குறித்து அவ்வப்போது அலர்ட் செய்தும் வருகிறார். 


"நாம் ஏற்கனவே கடந்த காலத்தில் ஏற்பட்ட தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை.. அதனால் வரப்போகும் மூன்றாம் அலையை ஒரேயடியாக தவிர்க்க முடியாது.. அது 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவை தாக்கும் என்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குநர் ரந்தீப் குலேரியா கடந்த மாதமே தெரிவித்திருந்தார். 


அந்தவகையில் இப்போது ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், அவர் சொல்லும்போது, "இந்தியாவில் 3வது அலை ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது... இருந்தாலும், தொற்று கட்டுப்பாடுகளை எந்தளவிற்கு பின்பற்றுகிறோம் என்பதை பொறுத்துதான் அதன் தாக்கம் அமையும்... ஆனால், 2வது அலையை போல் அந்த அளவுக்கு வீர்யம் இருக்காது என்றே நினைக்கிறேன்.. ஆனால், தடுப்பூசி போடாத காரணத்தால் குழந்தைகள் அதிக அளவில் கொரோனா பாதிப்பிற்கு ஆளாக வாய்ப்புள்ளது. 


நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. இந்த ஆகஸ்ட் மாதத்தில் முதல் 10 நாட்களில் பெங்களூருவில் மட்டும் 543 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அதில் 0-9 வயதுக்கு உட்பட்டவர்கள் 88 பேர், 10-19 வயதுக்கு உட்பட்டவர்கள் 305 பேர் என்று தெரிய வந்துள்ளது... அதிலும் கடைசி 5 நாட்களில் மட்டும் 499 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது... இதுதான் மிகுந்த கவலையையும் பெங்களூருவில் ஏற்படுத்தி உள்ளது. 


எப்படியும், அடுத்த ஓரிரு மாசத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் கிடைத்துவிடும்.. அதுக்குப்பிறகு, தடுப்பூசி போட்டுக் கொள்ள நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்.. எல்லா வயதினரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்... இதனால் மோசமான பாதிப்புகள் எதுவும் வராது.. ஒருவேளை 3வது அலை வந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது" என்றார்.

Share via