Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம் அனைத்து மத மக்களுடன் கோலாகலமாக நடைபெற்றது.

by Editor

ஆன்மீகம்
புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம் அனைத்து மத மக்களுடன் கோலாகலமாக நடைபெற்றது.

தென்காசி நகரில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய 362 வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பாரம்பரியமாக தென்காசி மாவட்டம் அகரக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த பங்குமக்கள் சார்பில் திருக்கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஏற்றப்படுவது வழக்கம் இதனை முன்னிட்டு அகரக்கட்டு கிராமத்தில் இருந்து திருக்கொடியுடன் 300க்கும் மேற்பட்ட இறை மக்கள் திருக்கொடியுடன் ஊர்வலமாக வந்து பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கொடியேற்று விழாவில் கிறிஸ்தவ முஸ்லிம் இந்து ஆகிய மும்மதத்தை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். திருவிழா இன்று முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். இந்த ஆலயத்திற்கு தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இறை மக்கள் திருவிழாவில் கலந்து கொள்ள வருகை தருவார்கள். பத்தாம் நாள் திருவிழா நடைபெறும் செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறும் திருப்பலி மலையாள மொழியில் நடைபெறுவது வழக்கம். அந்நாளில் ஆயிரக்கணக்கான கேரளாவைச் சேர்ந்த இறை மக்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via