Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

 சனி பிரதோஷம் தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் கோபுரத்தை வட்டமிட்ட பருந்து. 

by Editor

ஆன்மீகம்
 சனி பிரதோஷம் தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் கோபுரத்தை வட்டமிட்ட பருந்து. 

இந்தியாவில் பிரசித்திபெற்ற வடகாசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சமமானதாக கருதப்படும்தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில்   ஆவணி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய தென்காசி,செங்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளைசேர்ந்த நூற்றூக்கணக்கான பக்தர்கள்.குவிந்தனர்.இந்நிலையில் ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு  சுவாமிக்கு எதிரே அருள் பாலிக்கும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. திரவிய பொடி, மஞ்சள் ,தயிர், பழச்சாறு ,தேன், பஞ்சாமிர்தம் ,பால், இளநீர் ,விபூதி ,சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை  கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் நந்தி பகவானை வழிபாடு செய்தனர்.இந்தநிலையில் ஆலயத்தில் சனி பிரதோஷ பூஜைகள் நடந்தபோது ராஜ கோபுரத்தை பருந்து ஓன்று வட்டமிட்டதைக்கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
 

Share via