
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவம் விழாவை முன்னிட்டு கொடியேற்றம்.விநாயகர், ஸ்ரீ அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் ரிஷபக் கொடியேற்றம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.