Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

2025ல் காசநோய் இல்லாத இந்தியா; வெங்கையா நாயுடு நம்பிக்கை

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
2025ல் காசநோய் இல்லாத இந்தியா; வெங்கையா நாயுடு நம்பிக்கை

புதுடில்லி: அனைவரும் கூட்டுசேர்ந்து முன்னெடுக்கும் கூட்டு முயற்சியே, 2025-ல் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் லட்சியத்தை அடைய வழிவகுக்கும் என துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார்.

லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுடன் இணைந்து பாராளுமன்றத்தில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: காசநோய் இல்லாத இந்தியா என்பது இந்தியாவின் நீண்ட கால நோக்கம். அது இன்னும் முற்றுப்பெறாமல் உள்ளது.

 அதற்கு எம்.பி.,க்கள் அவரவர் தொகுதியில் காசநோயை ஒழிப்பதற்கு தீவிர கவனம் செலுத்த வேண்டும். 2025-ல் காசநோயை ஒழிக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கத்தை, எம்.பி.,க்கள் மக்களிடம் சென்று பேரணிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

.இந்தியாவில் 2000-ம் ஆண்டிலிருந்து காசநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை மூலமாக இதுவரை 6 கோடியே 30 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பல்வேறு சுகாதார திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தியதால் 1950-ல் மக்களின் சராசரி ஆயுள் 35 வயது என்ற நிலையில் இருந்து 69.4 என்ற நிலைக்கு தற்போது உயர்ந்துள்ளது.

 அனைவரும் கூட்டுசேர்ந்து முன்னெடுக்கும் கூட்டு முயற்சியே, 2025-ல் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் லட்சியத்தை அடைய வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Share via