Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க ஆலோசனை !

by Editor

லைப் ஸ்டைல்
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க ஆலோசனை !

 


பிறந்த குழந்தைக்கு நிச்சயம் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கக்கூடாது. அதன் பின் சில ஆரோக்கியமான உணவுகளை கொடுத்தாலும் ஒரு வருடங்கள் வரை தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் தனது வாழ்நாளில் ஆரோக்கியமாக வாழ முடியும். இன்று தாய்ப்பால் அதிக அளவில் சுரப்பதற்கு சில இயற்கையான வழிமுறைகளை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

பெருஞ்சீரகம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இந்த பெருஞ்சீரகத்தில் டீ செய்து, தேன் கலந்து பருகி வர தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
ஆலம் விழுது, ஆலம் விதை ஆகியவற்றை கஞ்சி போல காய்ச்சி தாய்மார்கள் சாப்பிடுவதாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
சதகுப்பை எனும் கீரையை தாய்மார்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பொழுது குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.


அதி மதுரம் பொடியை சர்க்கரையுடன் கலந்து குடித்து வர தாய்பால் சுரக்கும்.
அதுபோல பிரசவத்திற்கு முன்பும், பின்பும் பேரிச்சம் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் தாய்ப்பால் சுரக்க வழிவகுக்கும்.
வெந்தயத்தை பாலில் சேர்த்து காய்ச்சி, சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்து வரும் பொழுதும் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
தாய்ப்பால் அதிகம் சுரக்க வேண்டும் என விரும்புபவர்கள் முருங்கை கீரை மற்றும் அகத்திக் கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

Share via