
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு திருச்சிற்றம்பலம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தை யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்குகிறார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் மற்றும் அனிருத் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடிக்க, பிரகாஷ் ராஜ், இயக்குநர் இமையம் பாரதி ராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.