Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க   ஆசிரியர்களுக்கு உத்தரவு 

by Editor

கல்வி
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க   ஆசிரியர்களுக்கு உத்தரவு 


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் அனைவரும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், பள்ளி கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.


தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜூலை 30) தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பள்ளிகள் திறப்பது குறித்த எந்தவொரு அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.


இதனிடையே தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் ஆன்லைன் மூலமாக நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில், ‘தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தற்பொழுதுள்ள நடப்பு கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


இந்த மாணவர்களின் விவரங்களை EMS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கரூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் 450 மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளார். அதே போல மற்ற ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோரை சந்தித்து, அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும். மேலும் தனியார் பள்ளி மாணவர்களையும் மறுக்காமல் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு அரசுப் பள்ளிகளிலும் செயல்பட்டு வரும் ஆய்வகங்கள், கழிவறைகள் குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Share via

More Stories