இன்று லக்னோ ஏகனா கிாிக்கெட் நகர கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு ஆஸ்திரேலியா அணியும் சவுத் ஆப்பிரிக்கா அணியும் மோதின..டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது .களத்தில் இறங்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு முன்னூத்தி பதினோரு ரன்களை குவித்தது .அடுத்த ஆட வந்த ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சரசரவென்று விக்கெட்டுகளை இழந்த நிலையில்40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களை எடுத்து உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவது தோல்வியை சந்தித்தது. தென்னாப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது