
ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான 'சந்திரமுகி' திரைப்படம் இமாலய வெற்றி பெற்றது. தற்போது படம் வெளியாகி 17 ஆண்டுகள் கழித்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து முடித்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் லோகேஷ் கனகராஜின் கதையில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும், நயன்தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.