Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

டிகிரி முடித்த 6100 பேருக்கு State Bank of India வில் அப்ரண்டிஸ் பயிற்சி

by Admin

கல்வி
டிகிரி முடித்த 6100 பேருக்கு State Bank of India வில் அப்ரண்டிஸ் பயிற்சி

டிகிரி முடித்த 6100 பேருக்கு State Bank of India வில் அப்ரண்டிஸ் பயிற்சி

பொதுத்துறை வங்கியான State Bank of India பட்டதாரிகளுக்கு ரூ.15000/- உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சியை வழங்குகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இது குறித்த விபரங்கள் வருமாறு:

பயிற்சியின் பெயர்: Apprenticeship Training

காலியிடங்கள்: 6100

( மாவட்ட வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது )

உதவித்தொகை: ரூ.15000/- மாதம்.

வயதுவரம்பு 31 -10 -2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC/PWD பிரிவை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்-லைன் வழி எழுத்துத்தேர்வு மற்றும் உள்ளூர் மொழியில் பேசும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.

தமிழ்நாட்டில் எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்:

சென்னை, மதுரை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், நாகர்கோவில்.

lso Read - பர்கூர் கூட்டுறவு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
google-news
எழுத்துத் தேர்வுக்குரிய பாடத்திட்டம் மதிப்பெண், தேர்வு நேரம் போன்ற விவரங்கள் :

விண்ணப்பக் கட்டணம்:

ரூபாய் 300/- கட்டணத்தைSBI வங்கி E-receipt ஐ பயன்படுத்தி ஆன்லைன் மூலம் செலுத்தவும், SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுமையாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள். ஆன்லைன் முறையில் 26 -7 -2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம், மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

Share via

More Stories