
நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று இருந்த நிலையில், மூன்றாவதாக வனிதா விஜய்குமார், பீட்டர் பால் என்பவரை 2020ல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்திருந்தார். தன்னுடைய யூ டியூப் பக்கத்திற்கு உதவுவதற்காக வந்த வரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் . இவர்கள் திருமணத்திற்கு பின்பு பீட்டர் பாலன் முதல் மனைவி இவர் மீது வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் பீட்டர் பாலுக்கும் வனிதாவிற்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு அவர் இருவரும் பிரிந்தனர். உடல் நலக்குறைவின் காரணமாகவும் பீட்டர் பால் இறந்ததை அடுத்து அவரது இரண்டாவது மனைவி வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில், தம் மூன்றாம் கணவர் பற்றிய இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார் .அதில் அவர்“தங்களுக்கு உதவுபவர்களுக்கு கடவுள் உதவுவார் என்று என் அம்மா ஒருமுறை எனக்குக் கற்றுக் கொடுத்தார். கண்டிப்பாக அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்..நீங்கள் அமைதியைக் கண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் இந்த உலகத்தை விட்டு பிரிந்ததற்காக நான் வருத்தமாக உணர்கிறேன், நீங்கள் நிச்சயமாக ஒரு சிறந்த இடத்தில் இருப்பதை நான் அறிவேன்,'