Advertiment

திரைப்படத்தொழிலாளர்களைப்பற்றி கவலைப்பட்ட விஜய் தேவகொண்டா

by Writer

சினிமா
திரைப்படத்தொழிலாளர்களைப்பற்றி கவலைப்பட்ட விஜய் தேவகொண்டா

 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் விஜய்  தேவகொண்டா .இவர் சமீபத்தில் நடித்துஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி வெளிவர  உள்ள திரைப்படம் லிகர்.அனன்யா பாண்டே  கதாநாயாகியாக  நடித்துள்ள இப்படம்  பான்  இந்திய படமாகும் .மிகுந்தஎதிர்பார்ப்புடன் ரசிகர்கள் எதிர்  நோக்கி யிருக்கும் இப்படத்திற்காக பல முக்கிய  நகரங்களில் பல்வேறு விதமான விளம்பரங்களை  செய்து வருகிறார்.பாலிவுட்டில் சமீபகாலமாக இந்தி திரைப்படங்களுக்கும்  அதில் நடித்து  வரும்   நடிகர்களுக்கும்   புறக்கணிப்புகள்  நடந்து  வருகின்றன   .கங்கனா ரனாவத் போன்றோரின்   படங்கள்  சரியான வ சூலை   அடையவில்லை  .அமீர்கான்   எடுத்த   டாம் ஹாங்க்ஸின்   ஃபாரெஸ்ட் கம்ப் படத்தின் இந்தி ரீ   மேக்கான   லால்  சிங்  சத்தா    படத்தினை புறக்கணிக்கும் போக்கு  உருவானது. இது பற்றி  கவலைகொண்ட  விஜய் தேவ கொண்டா படம் புறக்கணிப்பபு  அமீர் கானை என்றால்  அவர்நடித்துள்ள படத்தில் வேலை பார்த்த இரண்டாயிரம் மூவாயிரம்  குடும்பங்களின்  வாழ்வாதாரத்தை  பாதிப்பதாக  உள்ளது. அதனால் , அமீர்கான் புறக்கணிப்பு  பலரின் வாழ்கையையே பாதிக்கிறது  என்கிற  தொழிலாளர் நலன் குறித்த பேச்சு இப்பொழுது  ,பலமொழிகளில் பேசு பொருளாகியிருக்கிறது. லிகர் படத்தின் வெற்றியை வைத்தே விஜய்  பான்  ஸ்டாராகப்பார்க்கப்படுவார். தென்னிந்திய படங்கள் தான் இப்பொழுது ..சக்கை போடுகின்றன   ..பாலிவுட்டிலும் கூட.

Share via

More Stories