Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

காலை கண் விழிப்பதில் தொடங்கி சமூகவலைதளத்தை பயனுள்ளதாக பயன்படுத்தும் விதம்

by Editor

லைப் ஸ்டைல்
 காலை கண் விழிப்பதில் தொடங்கி சமூகவலைதளத்தை பயனுள்ளதாக பயன்படுத்தும் விதம்

சமூக வலைதளங்களையும் தாண்டி இணையத்தின் பயன்பாடு அளப்பரியது; எல்லையற்றது, சமூக வலைதளங்களையும்கூட நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து பயனுள்ளவையாக மாற்றிக்கொள்ள முடியும்.

இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் கட்டற்ற இணைய இணைப்புடன் கூடிய உயர்ரக ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறோம். பிறரை தொடர்புகொள்ள, மின்னஞ்சல் பார்க்க என்பது போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளை தாண்டி, காலை கண் விழிப்பதில் தொடங்கி, உணவருந்தும்போது, பயணத்தின்போது, இரவு தூங்க செல்வதற்கு முன்புவரை என ஒரு நாளின் பெரும் பகுதியை சமூக வலைதளங்களில் செலவிடுகிறார்கள்.

இவற்றின் அதீத பயன்பாடு, வாசிப்பை இன்று பெருமளவு குறைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக கவனச் சிதறல், தொடர்ந்து பத்து வரிகளுக்கு மேல் வாசிக்க இயலாமை என்பது போன்ற சிக்கல்கள் வாசிப்பில் ஏற்படுகின்றன. மேலும், இன்றைக்கு எந்தவொரு தகவலையும் சில வினாடி நேரத்தில் எடுத்துவிடக்கூடிய நிலையில் நாம் இருந்தாலும், அது குறித்த ஆழ்ந்த அறிவையும் புரிதலையும் பெற்றிருக்கிறோமா என்பது கேள்விக்குரியாகும்.

இத்தகைய சிக்கல்கள் இருந்தாலும், இணையத்தை வாசிப்பு களமாக நாம் மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு தேவை வாசிப்பில் நம்முடைய விருப்பத்தையும் தேர்வையும் கண்டு அடைவதே. கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், நேர்காணல், மொழிபெயர்ப்பு இன்னும் பிற என பல்வேறு வகைப்பாடுகளால் ஆன கட்டுரைகள் தினமும் ஆயிரக்கணக்கில் எழுதப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை இலவசமாகவே வாசிக்க கிடைக்கின்றன.

எனவே சமூக வலைதளங்களையும் தாண்டி இணையத்தின் பயன்பாடு அளப்பரியது; எல்லையற்றது, சமூக வலைதளங்களையும்கூட நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து பயனுள்ளவையாக மாற்றிக்கொள்ள முடியும்...

Share via