Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ராவணனாக நடிக்கும் ரன்வீர் சிங்!

by Admin

சினிமா
ராவணனாக நடிக்கும் ரன்வீர் சிங்!

பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ சரித்திர படத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மகாபாரத கதையையும் மலையாளத்தில் படமாக்க உள்ளனர். தெலுங்கில் ராமாயண கதை ஆதிபுருஷ் என்ற பெயரில் படமாகிறது.  இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். சீதையாக நடிக்க கீர்த்தி சனோனை ஒப்பந்தம் செய்துள்ளனர். ரூ.500 கோடி செலவில் தயாராகிறது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் இந்தியிலும் ராமாயண கதை சீதா என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் சீதா என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் சீதையாக நடிக்க கரீனா கபூர், அலியாபட் ஆகியோர் பரிசீலிக்கப்படுவதாகவும் கரீனா கபூருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது. ராவணன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேசி வருகிறார்கள். அவருக்கு கதை பிடித்துள்ளதால் ராவணனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை அலாவ்கிக் தேசாய் இயக்குகிறார்.

Share via