Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

சினைப்பை நீர்க்கட்டிக்கு விடை கொடுப்போம்...

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
சினைப்பை நீர்க்கட்டிக்கு விடை கொடுப்போம்...

பிசிஓடி பிரச்சனை உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் பெல்விக் எக்ஸாமினேஷன், ரத்தப் பரிசோதனைகள் மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள்.

சமீப காலங்களில் அதிகமாக பெண்களை அச்சுறுத்தும் பிரச்சனையாக இருப்பது பிசிஓடி அல்லது பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையாகும்..பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த பிரச்சனை வருவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை என்று தான் கூறவேண்டும்.

 நீர்க்கட்டி ஏற்படுவது என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு.

 பிசிஓடி உள்ள பெண்களுக்கு கருமுட்டை தாமதமாக உருவாகும் அல்லது உருவாகாது. இதனால் வழக்கமான மாதவிடாய் சுழற்சியானது பாதிப்படையும். ஒழுங்கற்ற மாதவிடாயால் குழந்தைப் பேறும் தாமதமாகும். இதனால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். மேலும், உடல் எடை அதிகரிப்பு, தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது

சினைப்பை நீர்க்கட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் இதுதான் என்று சரியாக கூற முடியாவிட்டாலும் பொதுவான காரணம் என்று பார்த்தால், மரபணு காரணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒருமுறை என சீராக இல்லாமல் தாமதமாக வருவது அல்லது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருவது, உடல் எடை மிகவும் குறைவது அல்லது உடல் எடை மிகவும் அதிகரிப்பது இவை அனைத்தும் நீர்க்கட்டி உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்.

 நீர்க்கட்டி ஏற்படுவதால் முகத்தில் அல்லது தேவையற்ற இடங்களில் முடி வளர்வது, தலை முடி கொட்டுவது, குரல் மாறுபாடு, முகத்தில் அதிக அளவில் முகப்பரு ஏற்படுவது, மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

பிசிஓடி பிரச்சனை உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் பெல்விக் எக்ஸாமினேஷன், ரத்தப் பரிசோதனைகள் மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். நீர்க்கட்டி பிரச்சினை இருப்பது உறுதி செய்யப்பட்டால் ரத்த அழுத்தம், குளுக்கோஸ் டாலரன்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் டிரைகிளிசரைடு அளவுகளை அவ்வப்பொழுது சோதித்து சரிபார்க்க பரிந்துரைக்கிறார்கள். உடற்பயிற்சி செய்வதும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதும் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான சரியான வழிமுறைகள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
 

Share via