Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

நவோதயா பள்ளிகள் விரைவில் திறப்பு: நவோதயா வித்யாலயா சமிதி முடிவு

by Admin

கல்வி
நவோதயா பள்ளிகள் விரைவில் திறப்பு: நவோதயா வித்யாலயா சமிதி முடிவு

மாநில அரசுகளின் முடிவுக்கேற்ப நவோதயா பள்ளிகளைத் திறக்க நவோதயா வித்யாலயா சமிதி முடிவு செய்துள்ளது.  
 
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், மாநில அரசுகளின் முடிவுக்கேற்ப நவோதயா பள்ளிகளையும் திறக்க நவோதயா வித்யாலயா சமிதி முடிவு செய்துள்ளது. மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எந்த தேதியில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளதோ, அதே தேதியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக, நவோதயா பள்ளிகளும் திறக்கப்படும் என்று நவோதயா வித்யாலயா சமிதி அறிவித்துள்ளது.
 
மாநில அரசுகள் வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பெற்றோர்களின் விருப்பத்துடன் மாணவர்கள் பள்ளிகளுக்கும், விடுதிகளுக்கும் வரலாம் என்றும் நவோதயா வித்யாலயா சமிதி அறிவித்துள்ளது.

மாணவர்களின் மனநலன், உடல்நலனை கருத்தில் கொண்டு உரிய ஆலோசனை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும் நவோதயா வித்யாலயா சமிதி தெரிவித்துள்ளது.
 

Share via

More Stories