Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தெளிவான திரைக்கதை படத்தை பார்க்க தோன்றுகிறது

by Admin

சினிமா
தெளிவான திரைக்கதை படத்தை பார்க்க தோன்றுகிறது

விதார்த் நடித்த குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கி  விஜய்சேதுபதி,அபிராமி, திவ்யபாரதி, ராமதாஸ்,சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்த மகாராஜா திரைப்படம் மூன்று நாட்களில் 22 கோடியை வசூரில் ஈட்டி கொண்டிருக்கிறது. பள்ளிகள் திறந்து பக்ரீத் பண்டிகையை ஒட்டி ய மூன்று நாள் விடுமுறை என்பதால் படத்திற்கான ரசிகர்களின் வருகை திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது 

கதையும் கதை போக்கும் விஜய் சேதுபதியின்  இயல்பான நடிப்பும் ஒளிப்பதிவும் இயக்கமும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்து படத்தை வெற்றியடைய செய்திருக்கிறது. ஒரு சாதாரண முடிவெட்டும் தொழில் செய்யும் விஜய் சேதுபதி காவல் நிலையத்தில் தன்னுடைய வீட்டில் உள்ள குப்பை தொட்டியை திருடிவிட்டதாகவும் அதை மீட்டு தந்தாள் திருடிய மூன்று பேரை தான் பார்த்ததாகவும் அவர்கள் துடித்தால் ஏழு லட்ச ரூபாய் தருவதாகவும் பேரம் பேசி.. ஒரு முரட்டு பிடிவாத காரணமாகவும் அழுத்தமானவனாகவும் நடித்திருக்கும் விஜய் சேதுபதியினுடைய நடிப்பு ....படத்தின் இறுதி கட்டத்தில்தான் எதற்காக விஜய் சேதுபதி காவல் நிலையத்திலேயே தஞ்சம் அடைந்து கிடக்கிறார் என்பதை கிளைமாக்ஸ்  வெளிப்படுத்துகிறது.. படத்தை பார்ப்பவர்கள் முக்கால் பாகம் முடியகிற வரைக்கும் ஒரு குப்பை தொட்டிக்காக இப்படியாக மனுஷன் போராட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற பொழுது.... கதையின் போக்கு வேறு... வேறு காட்சிகளோடு கதையின் மைய புள்ளியை நோக்கி நகர்கிறது..

தெளிவான திரைக்கதை படத்தை பார்க்க தோன்றுகிறது.. கதை இல்லாமலே வந்து கொண்டிருக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒரு வலுவான கதையை எடுத்து சரியான முறையில் அதை எடுத்துச் சென்று இயக்குனர் வெற்றியடைய செய்திருக்கிறார்.. நடித்த அனைத்து நடிகர்களும் பாத்திரத்தில் ஏற்ப பொறுப்போடு நடித்திருக்கிறார்கள் .மூன்று நாட்களில்  வசூல் 21.45 கோடி

Share via