Advertiment

நயன்தாராவின்  நெற்றிக்கண் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்

by Editor

சினிமா
நயன்தாராவின்  நெற்றிக்கண் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்

 

 நெற்றிக்கண்  திரைப்படம் சமீப காலங்களில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படமாகும்.
விக்னேஷ் சிவன் தன் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்களில் இல்லாமல் ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் ட்ரெய்லரை இன்று வெளியிட்டுள்ளனர்.


2011 ஆண்டு வெளிவந்த கொரிய மொழி படமான ப்ளைண்ட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் ஆன நெற்றிக்கண் மிலிந்த் ராவ் இயக்கியுள்ள்ளார்.

கண் பார்வை இல்லாத ஒரு பெண், தன்னுடைய மற்ற திறன்களைப் பயன்படுத்தி ஒரு சீரியல் கொலையாளியைக் கண்டுபிடிப்பதே இப்படத்தின் கதைக்களமாகும். இந்த படத்தில் அஜ்மல் அமீர், சரண், இந்துஜா மற்றும் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் கிராஸ் பிக்சர்ஸ் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன. அவள் புகழ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் கையாள்கிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்த நிலையில்  தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 


ட்ரெய்லரை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, தீயாக இருக்கிறது. படம் முழுக்க பரபரப்பாக இருக்கும் என்பதை ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. தலைவிக்கு ஒரு ஹிட் பார்சல். அஜ்மல் வில்லனாக மிரட்டியிருக்கிறார். ட்ரெய்லரை பார்த்த உடன் முழுப் படத்தையும் இப்போதே பார்க்க வேண்டும் போன்று இருக்கிறது. இப்படி ஒரு அருமையான படத்தை போய் ஓடிடியில் ரிலீஸ் செய்கிறீர்களே. பெரிய தப்பு பண்ணிட்டீங்க விக்னேஷ் சிவன். நெற்றிக்கண் மட்டும் தியேட்டர்களில் ரிலீஸாகியிருந்தால் பெரிய அளவில் கொண்டாட்டமாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Share via

More Stories