
உயர்கல்வியில் பொது பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை -அதிமுகவின் 31 ஆண்டு கால ஆட்சியில் கல்வித்துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது குறிப்பாக 2011ல் திமுக ஆட்சியில் உயர்கல்வியில் 25 சதவீதமாக இருந்த மாணவர் சேர்க்கை அதனை தொடர்ந்து பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 51% வளர்ச்சி பெற்று இந்தியாவிலேயே உயர் கல்வித் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் முதன்மை மாநிலம் திகழ்ந்தது கடந்த இரண்டு ஆண்டு காலம் திமுக ஆட்சியாளர்கள் நடத்தும் அலங்கோல அரசின் உயர்கல்வித்துறை சீரழிந்து விட்டதாக கல்வியாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர் துறையின் அமைச்சர் பொன்முடி தான் ஒரு கல்வியாளராக இருந்ததை மறந்து தமிழ்நாட்டின் இளைஞர்களுடைய எதிர்காலத்தை நினைக்கக்கூடிய உயர் கல்வித் துறையின் வளர்ச்சியை பற்றி கவலைப்படாமல் இருப்பதால் தமிழகத்தில் உயர்கல்வித்துறை அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகமும் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது திமுக அரசின் இந்த முடிவுக்கு பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அவசரகதிர் உருவாக்கப்பட்டு அவசரகதியில் திணிவிக்கப்படும் பொது பாடத்திட்டத்தால் தமிழகத்தில் உயர்கல்வியின் தரம் கேள்விக்குறியாகும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது பொது பாடத்திட்டத்தால் தமிழக உயர்கல்வியின் தரம் குறையும் என்றும் பல்கலைக்கழக மானிய குழு சார்பில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 45 ஆண்டு காலத்திற்கும் மேலாக வழங்கப்பட்டு வரும் தன்னாட்சி அந்தஸ்தை இழக்க நேரினம் என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள் தமிழக உயர்கல்வி கபட வேட திராவிட மாடல் ஆட்சியாளர்களிடம் சிக்கி குரங்கு கையில் சிக்கிய பூமாலை போய் மாறி சின்னாபனமாகி உள்ளது வேதனைக்குரியது எனவே கல்வித்துறையில் ஏதேனும் மாறுதல்களை கொண்டு வரும் முன்பு கட்சி கண்ணோட்டம் இல்லாத உண்மையான கல்வியாளர்களை அழைத்து எதிர்கால தமிழக இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துவதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.