Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

 டி.என்.பி.எஸ்.சி நேர்முக தேர்வு  தொடக்கம்

by Editor

கல்வி
  டி.என்.பி.எஸ்.சி நேர்முக தேர்வு  தொடக்கம்


 

பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2020ம் ஆண்டுக்கான துறை தேர்வுகள் நடைபெற்றது. இதனை அடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நேர்முக தேர்வு கொரோனா தொற்று காரணமாக தாமதம் ஆகிய நிலையில், தற்போது இந்த தேர்வுகள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


அதில், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. 


 ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி நாகர்கோவில் மற்றும் நெல்லையை சேர்ந்தவர்களுக்கு நாகர்கோவில் மையத்திலும், 9 ஆம் தேதி மதுரை, அரியலூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, தூத்துக்குடி, பெரம்பலூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவாரூர், விருதுநகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு மதுரை மையத்திலும் நடைபெறுகிறது.


12, 13 ஆம் தேதிகளில் கோவை, ஊட்டி, ஈரோடு, கரூர், சேலம், திருப்பூர், நாமக்கல் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கோவை மையத்திலும், 15 ஆம் தேதி கிருஷ்ணகிரி, விழுப்புரம், தர்மபுரி பகுதியை சேர்ந்தவர்களுக்கு கிருஷ்ணகிரி மையத்திலும், 16 ஆம் தேதி வேலூர், திருவண்ணாமலை, கடலூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வேலூர் மையத்திலும், 17 ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு திருவள்ளூர் மையத்திலும், 26,27 ஆம் தேதி சென்னை மற்றும் டெல்லியை சேர்ந்தவர்களுக்கு சென்னை மையத்திலும் நடைபெறுகிறது.


குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் மூலமாக நேர்முக தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

Share via

More Stories