
சென்னை: ஒப்பந்த செவிலியர்கள் பாதிக்கப்படாத வகையில் பணி நியமனம் செய்யப்படும். புதிதாக பணியில் சேரும்போது ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மருத்துவத்துறை இயக்குநரகம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.