Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

உடல் எடை குறைக்க வேண்டுமா?:

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
உடல் எடை குறைக்க வேண்டுமா?:

 

”கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும்.

 நீர் திரிந்து இருக்கும் உடல் தான் குண்டாக இருக்கும் என்று ஏற்கனவே பதிவு செய்திருப்பேன்.

நீரை திரிந்து (கெட்டுப்)போகச் செய்வதில் பிரதான காரணம் வகிப்பது இந்த உப்பு தான்.

கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும்.

உப்புதான் உடலில் ஊளை சதை போடுவதற்கு மிக முக்கிய காரணம். உப்பானது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.

இதற்குத் தீர்வை இந்த பதிவில் பார்க்கலாம் பல முறைகள் இருக்கின்றது என்றாலும் நாம் இந்த "பால்" முறையை தேர்ந்தெடுக்கலாம்

கொள்ளுப் பால்:

செய்யும் முறை

100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி முளைக்கட்ட வேண்டும். 1-1.5 செமீ முளைவிட்டப் பின் சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.

தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.

உண்ணும் அளவு

ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு. ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்க வேண்டாம்

பலன்கள்

சிறுநீர் நன்றாக வெளியேறும்.அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும். சளித்தொல்லை நீங்கும். பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும்.

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

Share via